×

அதானி, அம்பானி பற்றி ராகுல் காந்தி தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார் : பிரியங்கா காந்தி

டெல்லி : அதானி, அம்பானி பற்றி ராகுல் காந்தி தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். அதானி, அம்பானி பெயரை கூட உச்சரிக்காத பிரதமர் மோடி, தேர்தலுக்காக அவர்களைப் பற்றி பேசுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மோடியின் விமர்சனம் மூலம் அதானி, அம்பானி கருப்புப் பணத்தை பெட்டி, பெட்டியாக கொடுத்திருப்பது அம்பலமானது என்றும் ராகுல் காந்தி கொடுத்த நெருக்கடியால் அதானி, அம்பானியின் ஊழலை மோடியே அம்பலப்படுத்தி உள்ளார் என்றும் பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

The post அதானி, அம்பானி பற்றி ராகுல் காந்தி தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார் : பிரியங்கா காந்தி appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Adani ,Ambani ,Priyanka Gandhi ,Delhi ,Congress ,Modi ,
× RELATED “விமான நிலையங்களை தாரைவார்க்க எத்தனை...